புதுக்குடியிருப்பு பகுதியில் பிரதான 4 உணவகங்களுக்கு சீல்!! சுகாதார பிரிவினர் அதிரடி!!

0
164

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான பல உணவகங்கள் பொதுசுகாதார பிரிவின் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பூட்டப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் அதிகளவான மக்கள் தங்கள் அன்றாட உணவுகளை பெற்றுக்கொள்ளும் முதன்மை உணவகம் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற 4 உணவகங்கள் வரை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய பூட்டப்பட்டுள்ளன.

07.01.2022 அன்று குறித்த உணவகங்கள் மீது புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார விதிமுறைகளில் கீழ் உணவகங்கள் இயங்காத காரணம், அனுமதி இல்லாத நிலை, சுகாதார பரிசோதகர்களால் அறிவிக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளை செய்யாத காரணம், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு குறித்த உணவகங்கள் மீது வழக்கு தொடர்ந்து பொதுசுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 07.01.2022 அன்று முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது உணவகங்கள் மீது தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் உணவகங்களில் சீர் செய்யப்பட வேண்டிய வேலை அனைத்தினையும் செய்து முடித்து பொதுசுகாதார பரிசோதகர்கள் அனுமதி கொடுத்தால் கடை திறக்கலாம் என்றும் அதுவரை கடைகளை பூட்டுமாறும் மன்று பணித்துள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் புதுக்குடியிருப்பில் குறிப்பிட்ட உணவகங்கள் பூட்டப்பட்டுள்ளன அன்றாடம் உணவகங்களில் உணவினை பெறுபவர்கள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உணவினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here