முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பெண் கொலை; கள்ள காதலன் பகீர் வாக்குமூலம்!!

0
320

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் கொ.லை செய்யப்பட்டார் என்று அவரது கள்ள காதலன் பொலிஸில் ஒப்புதல் வாக்கு மூலமளித்துள்ளார்.

இது குறித்து விரிவான தகவல் தெரியவருகையில்..????

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ்பிரிவிற்கு உட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து 08.01.2022 அன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த 36 அகவையுடைய யோகராசா றாஜினி என்ற பெண்ணே உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 04.01.2022 ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திருமணமாகி வயதுவந்த 22 அகவை ஆணும் 16 அகவை பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில் கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்துவந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாயின் பராமரிப்பில் பிள்ளைகள் இல்லாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு பூதன்வயல் கிராமத்தில் கிராம சேவையாளரின் பதிவுகூட இல்லாதநிலை காணப்பட்டுள்ளது, வேலைக்காக வந்து நின்ற ஆணுடன் உயிரிழந்த பெண்ணும் தற்காலிக சிறுகொட்டிலில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

கடந்த 04.01.2022 அன்று தொடக்கம் காணாமல் போன குறித்த பெண் தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில் தென்னங்காணியில் கிடந்த கைப்பையே இவர் உயிரிழந்தமையினை இனம் காட்டியுள்ளது.

உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று குறித்த தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து உடலம் கிணற்றினுள் இருப்பது பிரதேச மக்களால் இனம் காணப்பட்டு கிராம சேவகருக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ள நிலையில் உடலம் இனம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டு பிரேத அறிக்கையில்

பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ள நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் குடும்பப் பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

பெண்ணின் தலையில் காயம் காணப்படுவதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் பெண்ணின் கள்ள காதலரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். அதன்போது மனைவியை தான்தான் கிணற்றில் த.ள்ளிவிட்டதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here