யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், நேற்று காலை, 09.01.2022 கிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்தார்.
விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே, இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.
வீட்டிலிருந்து தோட்டத்துக்கு நடந்து சென்ற சிறுவன் கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார்.
சிறுவனை காணாத பெற்றோர், சிறுவனை எங்கும் தேடிய நிலையில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சடலத்தை மீட்ட பொலுஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே பெற்றோர்கள் கண்டிப்காக கவனிக்க வேண்டியது சிறுவர்கள் விளையாடும் இடங்களில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுகின்றனவா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான் இருக்கின்றது சிறுவர்கள் மீது அக்கறையுடன் செயற்படுங்கள்