பாகிஸ்தானுக்கு குத்துச்சண்டை போட்டிக்கு செல்லும் முல்லைத்தீவு மாணவி; குவியும் வாழ்த்துக்கள்!!

0
557

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள குத்து சண்டை போட்டிக்கு தமிழ் மாணவி செல்லவுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் மாணவியான கணேஷ் இந்துகாதேவி என்பவரே இவ்வாறு போட்டியில் பங்கேற்கயுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில்  வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகியுள்ளார்

இந்நிலையில் வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் பிரதமகரு சீவஸ்ரீ உமாசுதன் குருக்கள் ஐயா ஆசிர்விதித்துள்ளார்.

முல்லைத்தீவை சேர்ந்த தந்தையை இழந்த சர்வதேச குத்து சண்டை போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல தேர்வாகிய ஒரே ஒரு தமிழ் மாணவி கணேஷ் இந்துகாதேவி நாளை 13 ம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள குத்து சண்டை போட்டிக்கு தமிழ் மாணவி செல்லவுள்ள அவருக்கு முல்லைத்தீவு நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here