யாழ் பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவர் மீது சிரேஷ்ட மாணவர் விடுதிக்குள் புகுந்து தாக்குதல்!

0
116

யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞானபீட மாணவர் ஒருவர், தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) இரவு விடுதிக்குள் சிரேஷ்ட மாணவர் ஒருவர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன,

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் தங்கியுள்ளனர்.

நேற்று இரவு அந்த விடுதிக்குள் நுழைந்த இறுதி வருட சிங்கள மாணவர் ஒருவர், 3வது வருட சிங்கள மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் சிறிய பாதிப்பிற்குள்ளான 3வது வருட மாணவன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய இறுதி வருட மாணவன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞானபீட சிங்கள மாணவர்களிற்கிடையில் நடந்த 3வது மோதல் சம்பவம் இதுவாகும்.

சில நாட்களின் முன்னரும், விடுதிக்குள் நுழைந்து முதல் வருட மாணவரை, 3ஆம் வருட மாணவர் தாக்கியிருந்தார். தனது பகிடிவதை கட்டளையை மாணவன் உதாசீனம் செய்தார் என குறிப்பிட்டு, நள்ளிரவில் மதுபோதையில் பல்கலைகழக விடுதிக்குள் மதில் ஏறி குதித்து நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தார்.

அந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, 3ஆம் வருட மாணவனை பல்கலைகழதத்திலிருந்து இடைநிறுத்தி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here