முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 16.01.2020 இன்று மாலை இடம்பெற்றுள்ளது,
கணேஸ்வீதி தேவிபுரம் பகுதியில் வசித்து வரும் 38 அகவையுடைய ஆறுமுகம் பிரதீபன் என்ற குடும்பஸ்தர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட குடும்ப முரண்பாடு காரணமாக இவர் இவ்வாறன தவறான முடிவினை எடுத்துள்ளார்,
வீட்டில் இருந்த மின்விசிறியில் கயிற்றினை போட்டு கதிரையில் ஏறி நின்று தூ.க்கில் தொங்கியுள்ள நிலையில் உடலம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளதுடன் உடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்படும் முரண்பாடுகள் இவ்வாறான தவறான முடிவுகள்தீர்வாகாது.
இவ்வாறான முடிவிற்கு முன்னர் ஒவ்வொருவரும் சிந்தித்துப்பாருங்கள் நாங்கள் எதற்காக இந்த பூமிபந்தில் வந்துதித்தோம், என்று சாவல்களை கடந்து நிற்பதுதான் மனிதவாழ்க்கை பிரச்சினைகள் இல்லாத மனிதர்கள் இந்த உலகில் இல்லை அவற்றை கடந்து செல்வதுதான் மனித இயல்பு,