முல்லைத்தீவில் சில இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப்பாவனை இடம்பெற்று வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இளைஞன் ஒருவன் கஞ்சாவுடன் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுப்புக்குளம் முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 23 அகவையுடை இளைஞனே 25 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்த முல்லைத்தீவு பொலீசார் குற்றவாளியினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.