முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் 13 அகவை சிறுமியுடன் குடும்பம் நடத்திய திருகோணமலையினை சேர்ந்த இளைஞர் ஒருவரை மாங்குளம் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் 15.01.2022 அன்று இடம்பெற்றுள்ளது…
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் மாங்குளம் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காக திருகோணமலையினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலை தேடி வந்துள்ளார்,
இவர் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில் திருகோணமலை மூதூர் பகுதியினை சேர்ந்த இளஞன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி ஒருவரை அவரின் விருப்பத்துடன் அழைத்துவந்து சுமார் ஒரு மாதகாலமாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சிறுமி தொடர்பிலான தகவல் புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் அலசல் புலசலாக பேசப்பட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளமையினை தொடர்ந்து சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய இளைஞனை மாங்குளம் பொலீசார் கைது செய்துள்ளதுடன் 13 அகவை சிறுமியினையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார், இந்த சம்பவம் கடந்த 15.01.2022 அன்று இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் 16.01.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மூதூர் பொலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.