திருமணமான தம்பதியால் இளைஞன் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலை செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த இளைஞன் தனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.