பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி!

0
464

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி மாரியம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள வீட்டுத் திட்டத்தில் சிறியரக பிளாஸ்டிக் பீப்பாய் ஒன்றினுள் 3 வயது சிறுமி தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கை வீழ்ந்துள்ளதை அவதானித்த சிறுமியின் சகோதரன் தாயிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனையடுத்து உடன் விரைந்து மகளை மீட்ட தாய் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here