இலங்கையில் மின்சார வாகன இறக்குமதிக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஜனாதிபதி ஆர்வம் காட்டியுள்ளார். உலகம் இதைப் பற்றி மாத்திரமே பேசும் நேரத்தில், நாங்கள் இதற்கு செல்ல விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் தனது கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.