யாழில் எமனாக வந்த புகையிரதம்; உயர்தர மாணவன் பரிதாப மரணம்!!

0
527

யாழ் சாவகச்சேரியில் புகையிரதம் மோதியதில் உயர்தரம் கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனே, இவ்வாறு புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

விபத்தில் யாழ் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் என தெரியவந்துள்ளது.

நாளை பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுக்கு ஒன்றுக்காக ஆடை வாங்கச் சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here