நாட்டில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!!

0
130

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து 10 இலட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாதகமான விளைச்சலைப் பெறாத விவசாயிகளுக்கு மாத்திரமே நஷ்டத்திற்கான வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here