முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு ஆண் உத்தியோகத்தர்களுக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் கொரோனா தடுப்பு பிரிவு விடுதியில் இவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்