பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை உதித் லொகு பண்டார மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்பொழுது பணம் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து, அதற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை தொடர்பில் எழுந்த சந்தேகத்தையடுத்து, கணக்கை ஆய்வு செய்தபோது, கடந்த பல ஆண்டுகளாக குறித்த வங்கிக் கணக்கில் இருந்து தொடர்ந்தும் பணம் மீளப் பெறப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்த வங்கிக் கணக்கிற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டை உதித் லொகுபண்டார வசமிருந்ததாக தெரியவந்துள்ளது என பிரபல இணையதளம் தகவல் வெளியிடுள்ளது.