உலகளவில் தமிழரை பெருமைப்படுத்திய முல்லைத்தீவு யுவதிக்கு சொந்த மண்ணில் கிடைத்த கௌரவம்!

0
136

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஷ் இந்துகாதேவியை  பாண்ட் வாத்திய முழங்க கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு புதியநகர் புதியசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிசார்பில் பங்கேற்ற கணேஸ் இந்துகாதேவி என்ற யுவதி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.

இந்நிலையில் யுவதியினை கௌரவிக்கும் நோக்கில் இந் நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. யுவதியின் வீட்டில் இருந்து விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கிராமத்தில் இருந்து திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனும், சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி உள்ளைட்ட பல அதிகாரிகளும் , கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here