மரம் வெட்டும் இயந்திரத்தால் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி கொலை!!

0
751

இலங்கையில் மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்தால் கால்களை வெட்டி துண்டாக்கி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் இலங்கையில் கண்டி – கட்டுகஸ்தோட்ட மஹங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மற்றைய நபரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தால் அறுத்து பலத்த காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளார். பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

சத்திரசிகிச்சையின் உட்படுத்தப்பட்டபோது, உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பொஹலியத்த – கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here