கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இந்திய இழுவைப்படகுகள் மோதியதால் கடலில் வீழ்ந்து காணாமல் போயிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்த மீனவர்களில் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்,