புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு 4 டிப்பர், 2 உழவியந்திரங்கள் சாரதிகள் கைது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பன பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது,
கடந்த இரண்டு நாட்களாக புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம், கைவேலி தேவிபுரம் பகுதிகளில் முறையற்ற அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர்களும் 2 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்ப்டட சாரதிகள் பொலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மணல் ஏற்றிய வாகனங்கள் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
கைதானவர்களுளம் மற்றும் மண் ஏற்றிய வாகனங்களும் 22.02.2022 நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் ஏற்றும் வாகனங்கள் திருகோணமலை-யாழ்ப்பாணம் வீதிபோக்குவரத்து அனுமதியினை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கிராமங்களில் மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.