யாழில் இருந்து மினி பஸ்சில் முல்லைத்தீவு வந்த 13 பேர் கைது!

0
386

முல்லைத்தீவு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட அளம்பில் பகுதியில் இடம்பெற்ற மோதல் கைகலப்பு சம்பவத்தின் போது 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 13 பேர் முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ்பாணத்தில் இருந்து அளம்பில் சென்றவர்களுக்கும் அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கும்  நேற்று 20.02.2022 மாலை இடம்பெற்ற முரண்பாடு ஒன்றினை தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளது.

தாக்குதலின் போது யாழில் இருந்து சென்ற இருவரும் அளம்பில் பகுதியினை சேர்ந்த 18, 37, 45 அகவைக்கு உட்டபட்ட மூவரும் என 5 பேர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து யாழில் மினி பஸ்சில் சென்ற 12 பேர், அளம்பில் பகுதியினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு பொலீசாரால் துசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் சென்ற வாகனமும் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

இவர்களை இன்று 21.02.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்தப்பட்டபோது இவர்களை தலா இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழில் இருந்து வருகை தந்தவர்களின் மினிபஸ் சான்று பொருளாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 23.06.2022 ஆம் திகதி குறித்த வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here