புதுக்குடியிருப்பு விவசாயியை கடித்த 6 அடி நீள நாகம்; பாரிய முயற்சியின் பின்னர் அடித்து எரிப்பு!

0
314

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில் கடந்த 18.02.2022 அன்று வயலில் நெல் அறுவடைசெய்துகொண்டிருந்த இளம் விவசாயி ஒருவர் அரவம் தீண்டி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் போது விவவசாயி வயலில் மயங்கி விழுந்த நிலையில் ஏனைய விவசாயிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு 20.02.2022 அன்று உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்னிலையில் குறித்த விவசாயியின் வயல் நிலம் முழுமையாக அறுவடை செய்து முடிக்காத  நிலைகாணப்பட்டுள்ளது 21.02.2022 இன்றுஉறவினர்கள் விவசாயிகள் வயலுக்கு சென்று நெல் அறுவடையினை மேற்கொண்ட போது பாரிய நாக பாம்பினை கண்டுள்ளார்கள்.

குறித்த பாம்பு கொத்தியே விவசாயி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கிராமத்தினை சேர்ந்தவர்கள் விவசாயிகள் பாம்பினை பாரியமுயற்சி மேற்கொண்டு அடித்து எரித்துள்ளார்கள். வயல் நிலத்தில் காணப்பட்ட பாரிய நாகபாம்பு கிராம மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் ஆறு அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு கடித்தே விவசாயி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here