யாழில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர் கூலிக்கு யாசகம்; குழந்தைகளுடன் கைது!

0
140

யாழ்.சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக தகவல் வந்தமைக்கு அமைய அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் சாவச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று (21-02-2022) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல திரப்பினராலும் குற்றச்சாட்டபட்டது.

இதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here