முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் பகிரங்க ஏல விற்பனை எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வாகன ஏல விற்பனை இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரம், உழவு இயந்திரப் பொடிகள், TATA வாகனம் Mahindra வாகனம், அபான்ஸ் முச்சக்கரவண்டி இந் நீதி மன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பகிரங்க ஏல விற்பனை எதிர்வரும் எதிர்வரும் பெப்-26 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
எனவே பகிரங்க ஏல விற்பனையில் பங்கு கொள்ள விரும்புவர்கள் எதிர்வரும் சனியன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்துக்கு சமூகமளிக்குமாறு கோரியுள்ளனர்.