சுவிஸில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் 16 பேர்!

0
495

சுவிஸ் நாட்டின் விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையை சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்களும் உள்ளடங்களாக 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் திங்கள் (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இவர்கள் ஒரு தனி விமானம் மூலம் 45 சுவிஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன் மற்றும் 1 சுவிஸ் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் இலங்கை விமான நிலையம் வரை சென்று நேற்றைய தினம் (22.02.2022) காலை 9:00 மணி அளவில் இலங்கை விமானநிலைய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் ஓர் இளைஞன் தனக்கு இலங்கைக்கு சென்றால் உயிர் ஆபத்து இருப்பதாக கூறி செல்ல மறுத்த போது அவரின் கை, கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டு மனிதாபிமானம் அற்ற முறையில் விமானத்தில் அமர்த்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் வானில் பறந்து சுமாராக ஒரு மணித்தியாலங்கள் வரை கை, கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டு இருந்த இளைஞன் அதன் பின்னர் கட்டுக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுப்பப்பட்டவர்களில் முதியவர் ஒருவர் கீழே விழுந்து கையில் காயம் உண்டானது அவருக்கும் உடனடியாக மருந்து கட்டப்பட்டு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here