பிரான்ஸில் 24 வயது தமிழ் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை.!

0
709

கடந்த 22 ம் திகதி பிரான்ஸ் தலை நகர் பாரிசில், 24 வயது இளைஞரான அபிராமன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இவர் உடலில் 15 வெட்டுக் காயங்கள் உள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்தக் கொலையை சுவிஸ் நாட்டில் இருந்து, காரில் வந்த ஒரு தமிழ் கும்பல் செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது சுவிஸ் ஆவா குழு என்றும் அங்குள்ள மக்கள் சிலர் கூறுகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன,

இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிஸ் நாட்டில் ஒரு தமிழரை ஒரு கும்பல் அங்கே வைத்து அவரது காலை வெட்டியுள்ளது.

இதற்கு பழிக்குப் பழி வாங்கும் நோக்கத்தில் சரியான தருணம் வரை காத்திருந்து சுவிஸ் நாட்டில் இருந்து புறப்பட்டு வந்து பிரான்சில் இந்த 22 வயது இளைஞரை 15 தடவை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சுவிஸ் நாட்டுப் பொலிசாருடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் பொலிசார் பெரும் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here