கணவன் கண் முன்னே சுற்றுலா வந்த ஸ்பெயின் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

0
123

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பைக் ரைடர்களான தம்பதி, சுற்றுலா விசாவில் ஆசியா முழுவதும் ஒரு மெகா பைக் ரைடைத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்படி, வங்க தேசத்திற்குச் சென்ற தம்பதி, அங்கிருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பீகார் வழியாக ஜார்க்கண்ட் வந்திருக்கிறார்கள்.

இந்தியாவைக் கடந்து பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் அடுத்த திட்டமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் இருக்கும் தும்கா மாவட்டத்தை தம்பதி இருவரும் இரவில் சென்றடைந்திருக்கிறார்கள். அங்கேயே ஒரு தற்காலிக கூடாரம் அமைத்து இரவு தங்கிவிட்டு, காலையில் புறப்படுவதாகத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு, சுமார் 7 முதல் 10 பேர் வரை இருக்கும் ஒரு கும்பல், தற்காலிக கூடாரம் இருக்கும் இடத்தில் புகுந்து, சுற்றுலா தம்பதியைத் தாக்கி, அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இது தொடர்பாகப் வழக்கு பதிவுசெய்த காவல்துறை, 3 பேரைக் கைதுசெய்திருக்கிறது. தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடி வருகிறது. மேலும், கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here