குடும்ப தகராறு முற்றியதில் மனைவியை போட்டுத்தள்ளிய கணவன்.!

0
171

எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிரியெல்ல பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தா.க்.கி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிரியல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை அவர் தனது பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக தனது கணவர் வசிக்கும் வீட்டிற்கு சென்ற போதே படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

43 வயதான சந்தேக நபரின் கணவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here