யாழில் தனது 76 வயதிலும் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மூதாட்டி.. இதோ வீடியோ.!

0
328

யாழ் – சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தனது 76 வயதிலும் தைரியமாகவும் உடம்பில் ஆரோக்கியத்துடனும் ஓடிய 76 வயது பாட்டிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here