வற்றாப்பளை அம்மன் கோவில் பங்குனித் திங்கள் உற்சவம் ஆரம்பம்..!

0
180

அம்மனுக்கு உரிய முக்கிய உற்சவங்களில் ஒன்றாக பங்குனித் திங்கள் உத்தரம் காணப்படுகிறது. இந்த உற்சவமானது பங்குனி மாதத்தில் வரும் நான்காவது திங்கட்கிழமை அனுஷ்டகக்கப்படும்.

அந்த வகையில் வரலாற்று பிரசித்திபெற்ற முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் உற்சவம் இன்று (18) காலை இடம்பெற்றது.

இதன்போது பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இன்றைய பங்குனித்திங்கள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here