27 வயது பெண்ணை கொ.ன்.ற 22 வயது இளைஞன் கைது… இலங்கையில் நடந்த பகீர் சம்பவம்.!

0
217

சீதுவ பிரதேசத்தில் தங்கும் அறை ஒன்றில் 2 பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகநபர் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.

27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 14 ஆம் திகதி ரத்தொலுவ, முத்துவடியா வீதியிலுள்ள தங்கும் அறை ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

அநுராதபுரம் – பாமுகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.

22 வயதுடைய இந்த இளைஞனுடன் சில காலமாக தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சீதுவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு தயாராகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற 13 ஆம் திகதி இரவு இந்த அறையில் இருந்த சந்தேக நபர் மறுநாள் காலை அறையை விட்டு வெளியேறியதை விடுதியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

கொலையின் பின்னர், சந்தேகநபர் தொலைபேசியில் தனது நண்பரிடம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here