கடலில் நீராடச் சென்ற இளம் பிக்கு ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர் ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த தேரர் என தெரியவந்துள்ளது.
நேற்று வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம் செய்திருந்த போது, விகாரையில் இருந்த பிக்குகள் குழுவுடன் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிக்குவின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (19) நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.