திருமணம் செய்து லண்டனுக்கு சென்ற முல்லைத்தீவு பெண் பரிதாப மரணம்.!

0
398

லண்டனுக்கு சென்று ஐந்து மாதங்களில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில் பிரித்தானியாவுக்கு கணவரிடம் சென்று, ஐந்து மாதங்களில் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது…

இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பிரித்தானியாவுக்கு கணவரிடம் சென்று இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மாயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசாகன் சாதுஜா வயது 31 என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here