யாழ் புன்னாலைக்கட்டுவானில் பாரவூர்தி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் வடக்கு புன்னாலைக்கட்டுவான் சந்திக்கு அருகில் இன்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
லாண்ட் மாஸ்டரில் வந்த ஒருவர் அதை வீதியோரம் நிறுத்தி விட்டு, வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்த போது, பாரவூர்தியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரைக்கு சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் லாண்ட் மாஸ்டர் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.