யாழில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்ப்பு.!

0
149

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்றையதினம் (31) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்துரை தவராசா என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here