திருகோணமலையில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பயங்கரம்.. கதறும் மனைவி.!

0
234

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (02) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயமுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு, கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here