யாழில் இளம் ஊடகவியலாளர் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு.!

0
234

யாழில் இளம் ஊடகவியலாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றிய நடேசு ஜெயவானுஜன் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இருபாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இவர் மீடியாவில் பல்திறன் கொண்ட கலைஞனாக வலம் வந்தவர்.

செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வானொலி அறிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், செய்தி உதவி ஆசிரியர் என பல பரிமாணத்தில் தனது தனித்திறமையை காட்டி மீடியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.

அத்துடன் கவிஞர், பாடகராகவும் அவர் தனது திறமையை வெளிக்காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

உடல்நிலை பாதிப்பால் சிறிது காலம் ஓய்விலிருந்த போதும் ஊடகத்துறையில் அவர் கொண்ட ஆர்வத்தால், இறுதிவரை இப் பணியை ஆற்றியிருந்தார்.

குறித்த கலைஞனின் இழப்பு பெரும் துயருக்குள் ஆழ்த்தியுள்ளது. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here