8 வயது சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் – திருகோணமலையில் சம்பவம்..!

0
123

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும்,

அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார்.

விசாரணைகளின் பின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here