15 வயது சிறுமிக்கு வீட்டில் நடந்த பயங்கரம்.. பெற்றோர்களே அவதானம்..!

0
179

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வயிற்று வலிக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு தாயுடன் சென்ற போது, ​​அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் போதே, 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மூத்த சகோதரரால் பலமுறை வன்புணரப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்றதும், ​​அவரது மூத்த சகோதரர் தன்னுடைய அறைக்கு வந்து, தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.

கடைசியாக ஜனவரி 12 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளில் மூத்த சகோதரர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

அச்சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

எனவே பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களே உங்கள் பிள்ளைகள் மீது மிகுந்த கவனமாக இருங்கள், தந்தையாக இருந்தாலும் சரி, சகோதரங்களாக இருந்தாலும் சரி மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here