பாடசாலை அதிபர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு..!

0
150

குருணாகல் – மாஸ்பொத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருணாகல் – மரளுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது நபராவார்.

இவர் நேற்று (24) தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையொன்றிற்குள் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள நிலையில், பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here