திருடப்பட்ட 4 முச்சக்கர வண்டிகளுடன் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் பதுளை நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்த திருட்டை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 4 முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றின் இயந்திரங்கள் அகற்றப்பட்டு, எண்கள் மாற்றப்பட்டு, வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சந்தேகநபரிடம் 11 வாகனங்களின் இலக்கத் தகடுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் இலக்கத் தகடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.