யாழ் போதனா வைத்தியசாலையில் பெண்ணுக்கு நடந்தது என்ன; வெளியான பகீர் காணொளி..!

0
44

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருபிள்ளையின் தாயான இளம் பெண் உயிரிழந்தமை தொடர்பில் பகீர் காணொளி வெளியாகியுள்ள நிலையில் அங்கு சிகிச்சைக்கு செல்வதற்கே மக்கள் அச்சம் கொள்கின்ற நிலை தோன்றியுள்ளது.

உயிரிழந்த கிளிநொச்சி பெண் சுகவீனமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கணவனை இழந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாயாவார்.

இந்நிலையில் சுகயீனமுற்றிருந்த பெண்னிடம் மருந்துப்பொருகளை காசுகொடுத்து வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தான் வீடு செல்ல விரும்புவதாக பெண் கூறியபோதும் அவரை வீட்டுக்கு அனுப்பாமல் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கூட வைத்தியசலை ஊழியர்கள் மறைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பிலான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தாயை இழந்து தவிக்கும் அந்த பிள்ளைக்கு யார் ஆறுதல் கூறுவது. அதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையில் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவது தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.C

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here