”முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன்பட்ட முறிப்பு பகுதியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம்(16) உயிரிழந்துள்ளார்..
குறித்த முதியவர் கடந்த 13 ஆம் திகதி மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது இரவு 8.30 மணியளவில் மணவாளன்பட்ட முறிப்புபகுதியில் மாட்டுடன் மோதியதில் விபத்து சம்பவித்தது….
.
விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது….
சம்பவத்தில் உயிரிழந்தவர் மேழிவனம் பகுதியை சேர்ந்த இராசையா தியாகராஜா (வயது64) என்ற முதியவரே ஆவார்…
கிராமத்தில் பொது அமைப்புக்களில் இருந்து சிறந்த சேவையாற்றிவரும் இந்த முதியவரின் இழப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது…