தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் (ரெலோ) கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் 20.03.21 அன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமையப்பெற்ற மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது கட்சியின் செயலாளர்நயகம் பதவியும் பொருளாளர் ஆகியோர் பொதுக்குழுக்கூட்டத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் செயலாளர்நாயகத்தினை தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாளராக கனகரத்தினம் விந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார், கட்சியின் ஊடக பேச்சாளராக சுரேன் குருசாமி தொடர்ந்து பயணிக்கவுள்ளதாக கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.