முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியனை அண்டிய வீடுகளில் அண்மையாளன நாட்களில் பகல் கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வீடுகளில் எவரும் இல்லாத சந்தர்பத்தினை பார்க்கும் கொள்ளையர்கள் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து வருகின்றார்கள். அண்மை நாட்களில் மூன்று கொள்ளைச்சம்பவங்கள் புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதிகளில் பகல் வேளைகளில் இடம்பெற்றுள்ளன.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கடந்த 23.03.21 அன்று வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பம் பார்த்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து அறைக்குள் வைக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி,சங்கலி,காப்பு,உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள், இதுகுறித்து புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தடையவியல் பொலீசார் வந்து தடையங்களை எடுத்து சென்றுள்ளார்கள்.
பொலீசார் தீவிர விசாரணையில் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு நகரை அண்டிய மக்கள் தங்கள் வீடுகளிலும் தேவையில்லாத ஆள் நடமாட்டங்களையும் அவதானித்து பொலீசிற்கு தெரியப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.