குமுளமுனை கமநல சேவை நிலையத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையின் கீழ் உள்ள குருந்தூர் குளம் 30 வருடங்களாக புனரமைக்படாதநிலையில் தற்போது கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 10மில்லியன் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்பட்டு சிறுபோக விவசாய செய்கைக்கு நீர்வழங்கப்பட்டுள்ளது.
சிறுபோகம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குருந்தூர்குளத்தினை நம்பி சுமார் 60 ஏக்கர் வரையில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்கள்.விவசாயிகளின் சிறுபோக செய்கைக்கான நீர் திறந்துவிடும் நிகழ்வு 24.03.21 இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது குமுழமுனை கமநலசேவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் கமக்கார அமைப்பினர் விவசாயிகள் ஆகியோர் குளக்கொட்டில் வழிபாடுகளை மேற்கொண்டுபொங்கல் பொங்கி தண்ணீரினை திறந்து விட்டுள்ளார்கள்,