முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்தில் சிறுவர்கள் முதியவர்களை சிரமேத்தி சீராட்டும் விழா 24.03.21 அன்று நடைபெற்றுள்ளது.
செல்வபுரம் கிராம சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கரைதுறைப்பற்று பிரதேச செயவாளர் ம.உமைமகள் மற்றும் உதவி பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தெம்பைப்பிள்ளை கிராம அலுவலகர்,சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள்,மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் உள்ள திருமதி ஜீவேந்திரன் கலாநிதி குடும்பத்தினரின் நிதி உதவியில் நடைபெற்ற நிகழ்வில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டு;ள்ளதுடன் முதியவர்களும் கௌரவிக்கப்பட்டு பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன் போது சிறுவர்கள் முதியவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றுள்ளதுடன் நினைவாக மரக்கன்றும் நாட்டிவைக்கப்பட்டு அனைவரும் மரக்கன்றுகழும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது,