54வது தேசிய புத்தரிசி விழா நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒலுமடு கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது
ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் கமலநல அபிவிருத்தி உத்தியோகத்தர் த.குணாளன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிராம அலுவலர் மற்றும் கமநல சேவை நிலைய அரச அலுவலர்கள் மற்றும் கிராம விவசாய பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அரிசிகளை வழங்கி வைத்தனர்
வருடா வருடம் காலல போக நெல் அறுவடையின் பின்னர் அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் புத்தரிசியை பெற்று அக்ர சக்ய ஜெயஸ்ரீ மகா போதிக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
அந்தவகையில் 54வது தேசிய புத்தரிசி விழா ஊடாக இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒலுமடு கமநல சேவை நிலையத்தில் இந்த புத்தரிசி விழா சிறப்புற இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,