கோவலன் கண்ணகை நாட்டுக்கூத்தின் கண்ணகை என்ற கதாபாத்திரத்தினை ஏற்று நீண்டகாலமாக நடித்துவந்தவரும் சிந்துநடை ஏனைய கூத்து உள்ளிட்ட வீதிநாடகங்கள் பலவற்றில் நடித்த சிறந்த கலைஞனான கணபதிப்பிள்ளை ஜெயசீலன் 24.03.21 அன்று அகாலமரணமடைந்துள்ளார்.
முள்ளியவளையில் பிறந்து வளர்ந்து கலைக்காகவே காலங்காலமாக உழைத்து வந்த கலைஞர்களில் ஜெயசீலனும் ஒருவன்
ஒரு கலைஞனாக தனது இளவயதில் முதல் கலைக்காக உழைத்துவந்த நிலையில் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தினையும் கொண்டு சென்ற நிலையில் இந்த இழப்பு நிகழ்ந்துள்ளது.
கலைஞனின் உயிரிழப்பால் கிராம மக்கள் கலைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் வெற்றிடம் என்றும் ஈடுசெய்யமுடியாத வெற்றிடமாகவே காணப்படுகின்றது கலைஞர்கள் இன்றும் நலிவுற்ற கலைஞர்களாகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.