யாழ் பல்கலை கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே .ரி கணேசலிங்கம் தலைமையில் ஆற்றல் அமைப்பால் முன்னெடுக்கபட்டுவரும் “சமூக பணி ஒன்று” வேலைத்திட்டத்தின் அங்கமாக முல்லைத்தீவு உண்ணாப்புலவு சிறுவர் பூங்கா வளாகம் இன்று (27)சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள இந்த பூங்கா கவனிப்பாரற்று கிடந்த நிலையில் ஆற்றல் அமைப்பின் முயற்சியால் இன்று சிரமதானம் மேற்கொள்ள பட்டு சுத்தம் செய்ய பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேராசிரியர் கே .ரி கணேசலிங்கம் ,சிரேஸ்ட சட்டதரணி பரஞ்சோதி ,ஆற்றல் அமைப்பின் முல்லைத்தீவு இணைப்பாளர் விவேகானந்தன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தவராசா உப தவிசாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,