புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கி மீட்பு!

0
95

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் தனிநபர் ஒருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலீசார் வெடிபொருட்களை எடுத்துள்ளார்கள்.

உரப்பை ஒன்றில் சுத்தப்பட்ட நிலையில் ரி 56 துப்பாக்கி ஒன்றும் அதன் ரவைகள் 420ம் மீட்கப்பட்டுள்ளன.

பொலீசாரின் பொறுப்பில் உள்ள குறித்த துப்பாக்கி ரவைகளை நீதி மன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here